நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

ஒரு காலத்தில் தமிழ் சீரியல் உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தார் ராதிகா சரத்குமார். ராடன் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து நடித்த சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடைசியாக சித்தி-2 சீரியலை தயாரித்த வந்த ராடன் நிறுவனம் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்தது. ராதிகா தற்போது 'பொன்னி கேர் ஆப் வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இருப்பினும் ராதிகாவின் பழைய சீரியல்களுக்கு கிடைத்த பெயர் போல் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ராதிகா புதிதாக தயாரிக்கவுள்ள சீரியலில் 'பூவே பூச்சுடவா', 'அபிடெய்லர்' தொடர்களின் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் மற்றும் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' 1&2-வில் நடித்த அஸ்வினி ஆகியோர் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய ரோலில் நடிப்பதுடன் ராதிகாவும் நடிக்கிறார். இந்த சீரியலானது, தமிழின் சூப்பர்ஹிட் குடும்ப படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் தழுவலாக 'கிழக்கு வாசல்' என்ற டைட்டிலுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் இந்த புதிய சீரியல் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.