காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஒரு காலத்தில் தமிழ் சீரியல் உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்தார் ராதிகா சரத்குமார். ராடன் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து நடித்த சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடைசியாக சித்தி-2 சீரியலை தயாரித்த வந்த ராடன் நிறுவனம் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்தது. ராதிகா தற்போது 'பொன்னி கேர் ஆப் வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். இருப்பினும் ராதிகாவின் பழைய சீரியல்களுக்கு கிடைத்த பெயர் போல் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ராதிகா புதிதாக தயாரிக்கவுள்ள சீரியலில் 'பூவே பூச்சுடவா', 'அபிடெய்லர்' தொடர்களின் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் மற்றும் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' 1&2-வில் நடித்த அஸ்வினி ஆகியோர் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளனர். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய ரோலில் நடிப்பதுடன் ராதிகாவும் நடிக்கிறார். இந்த சீரியலானது, தமிழின் சூப்பர்ஹிட் குடும்ப படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் தழுவலாக 'கிழக்கு வாசல்' என்ற டைட்டிலுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் இந்த புதிய சீரியல் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.




