நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார் மாரிமுத்து. திரைப்படங்களில் உதவி இயக்குநராக தனது பயணத்தை ஆரம்பித்த மாரிமுத்து தமிழில் பல ஹிட் படங்களில் பணிபுரிந்துள்ளார். வாலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து அந்த படம் குறித்த சுவாரசியமான தகவலை அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வாலி படத்தின் கதைப்படி ஹீரோயின் சிம்ரனுக்கு அண்ணன் அஜித் யார், தம்பி அஜித் யார் என்ற குழப்பம் இருக்கும். படத்தில் இதற்காக சில திரில்லிங்கான காட்சிகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு காட்சியில் தொப்பியுடன் முகத்தை மறைத்து வரும் அஜித் மீசையை எடுத்திருப்பார். இருந்தாலும் அண்ணனா, தம்பியா என்ற பயத்தில் சிம்ரன் இருப்பார். அதன்பிறகு மனைவியின் குழப்பத்தை தீர்ப்பதற்காக தம்பி அஜித் மீசை எடுத்துக்கொண்டதாக விளக்கம் கூறுவார். சிம்ரனுக்கு பயம் போகும். இதை அண்ணன் அஜித்திடம் சொல்ல போகும் போது அண்ணனும் மீசை எடுத்திருப்பது போல் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அஜித் இந்த காட்சியை கடைசியில் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் மீசையை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, அந்த காட்சி படமாக்கப்படவில்லை. இந்த காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதிர்ந்திருப்பார்கள் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து கூறியுள்ளார்.