'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 100நாளை நெருங்கிய இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறினார். வெளியே வந்தபின் கதிர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலிலிருந்தது. இந்நிலையில், ஊடகங்களில் தற்போது பேட்டி தர ஆரம்பித்துள்ள கதிர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது பிக்பாஸ் டைட்டில் சர்ச்சை குறித்து பேசும்போது 'அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம்' என கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கதிர் முதன்முதலாக ஷிவின் குறித்து பேசியுள்ளார். இதை கதிர் மற்றும் ஷிவினின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.




