துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார். சினிமாவை பொறுத்தவரை அஜித் நடித்த வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் பிரகாசிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்னை அனுகினால் உதறி தள்ளிடுவேன். இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு' என்று கூறியுள்ளார்.