'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா |
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார். சினிமாவை பொறுத்தவரை அஜித் நடித்த வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் பிரகாசிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்னை அனுகினால் உதறி தள்ளிடுவேன். இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு' என்று கூறியுள்ளார்.