ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார். சினிமாவை பொறுத்தவரை அஜித் நடித்த வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் பிரகாசிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்னை அனுகினால் உதறி தள்ளிடுவேன். இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு' என்று கூறியுள்ளார்.