மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி |

பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட் ஆன ஹவுஸ்மேட்டுகள் உட்பட பல பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த வார எவிக்சனில் ஏடிகே வெளியேறியுள்ளார். இந்நிலையில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கானது அண்மையில் நடைபெற்றது. பைனலிஸ்ட் 6 பேரில் கதிர் மட்டும் பணம் மூட்டையை அறுக்க, மற்ற போட்டியாளர்கள் காத்திருக்கும்படி கேட்டனர்.
அப்போது கதிர் நான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறி பணமூட்டையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். கதிர் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த ஷிவினிடம், போட்டிக்காக வாழ்த்து கூறி கை குலுக்க முயன்றார் கதிர். ஆனால், ஷிவின் கைகொடுக்க மறுத்து கைகூப்பி கதிருக்கு விடைகொடுத்தார். கதிர் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாக பலரும் ஷிவினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.