'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அழகப்பன். தொடர்ந்து 'ஆபிஸ்' 'மாப்பிள்ளை', 'ரெட்டை வால் குருவி', 'தலையனை பூக்கள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவில் 'விதி மதி உல்ட்டா', 'நண்பர்கள் கவனத்திற்கு', 'வெயிலோடு விளையாடு' ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் அல்லது காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது 'ஆனந்தராகம்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களிடத்திலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆனந்த ராகம் தொடர் 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அழகப்பன் தனது வெளியிட்டுள்ள பதிவில், '100 வெறும் நம்பர் தான். ஆனால் ஹீரோவாக எனக்கு இது 100வது எபிசோடு. என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கும் பாராட்டியதற்கும் நன்றி. இந்த தருணத்தில் நான் எனது சக நடிகர்களுக்கும் எனது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய வெற்றியை எனக்களித்த மக்களுக்கும் மிகவும் நன்றி. இதேபோல் 1000, 2000 எபிசோடுகளை கொண்டாடவும் ஆசைபடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அழகப்பனின் இந்த பதிவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
--