சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அழகப்பன். தொடர்ந்து 'ஆபிஸ்' 'மாப்பிள்ளை', 'ரெட்டை வால் குருவி', 'தலையனை பூக்கள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவில் 'விதி மதி உல்ட்டா', 'நண்பர்கள் கவனத்திற்கு', 'வெயிலோடு விளையாடு' ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் அல்லது காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது 'ஆனந்தராகம்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களிடத்திலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆனந்த ராகம் தொடர் 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அழகப்பன் தனது வெளியிட்டுள்ள பதிவில், '100 வெறும் நம்பர் தான். ஆனால் ஹீரோவாக எனக்கு இது 100வது எபிசோடு. என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கும் பாராட்டியதற்கும் நன்றி. இந்த தருணத்தில் நான் எனது சக நடிகர்களுக்கும் எனது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய வெற்றியை எனக்களித்த மக்களுக்கும் மிகவும் நன்றி. இதேபோல் 1000, 2000 எபிசோடுகளை கொண்டாடவும் ஆசைபடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அழகப்பனின் இந்த பதிவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
--




