கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |
சின்னத்திரை நடிகையான தேஜஸ்வினி கவுடா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற தொடரின் மூலம் அறிமுகமான தேஜஸ்வினி, தற்போது ஜீ தமிழில் 'வித்யா நம்பர் 1', விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மிகக்குறைந்த நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள தேஜஸ்வினி பல இளைஞர்களின் காதல் தேவதையாகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலமான அமர்தீப்புக்கும் தேஜஸ்வினிக்கும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து மூன்று மொழி சின்னத்திரை ரசிகர்களும் அமர்தீப் - தேஜஸ்வினி ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.