பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சின்னத்திரை நடிகையான தேஜஸ்வினி கவுடா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற தொடரின் மூலம் அறிமுகமான தேஜஸ்வினி, தற்போது ஜீ தமிழில் 'வித்யா நம்பர் 1', விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மிகக்குறைந்த நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள தேஜஸ்வினி பல இளைஞர்களின் காதல் தேவதையாகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலமான அமர்தீப்புக்கும் தேஜஸ்வினிக்கும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து மூன்று மொழி சின்னத்திரை ரசிகர்களும் அமர்தீப் - தேஜஸ்வினி ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.




