அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில தினங்களுக்கு முன் திடீரென சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கினார். அவரை கவுன்சிலிங்கிறாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ரீநிதி 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமுதலே அவரது பாலோவர்களும் ரீ-ஆக்டிவ் ஆகி ஸ்ரீநிதியின் பதிவுகளை விடாமல் துரத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி நடிகை ஷகிலா மற்றும் ஸ்ரீநிதியின் அம்மா மூவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில், 'த்ரீ இன்டிபெண்டண்ட் வுமன்... ஷகீலா அம்மாவுக்கு நன்றி சொல்லமாட்டேன். நீங்க என்ன நல்ல புரிஞ்சிக்கிட்டீங்க. மனசாரா உங்களுக்கொரு முத்தம் கொடுத்தேன் அது போதும்' என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஸ்ரீநிதியும், ஷகீலாவும் கண்ணத்தோடு கண்ணம் வைத்து ஒட்டி நிற்கும் புகைப்படத்தையும் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார்.