18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில தினங்களுக்கு முன் திடீரென சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கினார். அவரை கவுன்சிலிங்கிறாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ரீநிதி 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமுதலே அவரது பாலோவர்களும் ரீ-ஆக்டிவ் ஆகி ஸ்ரீநிதியின் பதிவுகளை விடாமல் துரத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி நடிகை ஷகிலா மற்றும் ஸ்ரீநிதியின் அம்மா மூவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில், 'த்ரீ இன்டிபெண்டண்ட் வுமன்... ஷகீலா அம்மாவுக்கு நன்றி சொல்லமாட்டேன். நீங்க என்ன நல்ல புரிஞ்சிக்கிட்டீங்க. மனசாரா உங்களுக்கொரு முத்தம் கொடுத்தேன் அது போதும்' என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஸ்ரீநிதியும், ஷகீலாவும் கண்ணத்தோடு கண்ணம் வைத்து ஒட்டி நிற்கும் புகைப்படத்தையும் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார்.