பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வென்றார்கள். தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் முன்னேறி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் படப்பிடிப்புகள் கடந்த 15ம் தேதி நிறைவடைந்து விட்டது. இதனை இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் சிவாங்கி தெரிவித்துள்ளார். டைட்டில் வென்றது யார் என்பது வருகிற எபிசோட்களில் தெரியவரும். இதன் 4வது சீசனுக்கு சேனல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.