என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்த தொடர் மீரா. கடந்த மார்ச் 28 முதல் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான மற்றும் இனிமையான உறவுகள் குறித்த அனுபவங்கள் கதையாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனை குஷ்பு தனது அவ்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்தார். குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், அக்ஷயாக உள்பட பலர் நடித்தார்கள். கதையை குஷ்பு எழுத, ஏ.ஜவஹர் இயக்கினார். 62 எபிசோட்களே ஒளிபரப்பான நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக குஷ்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது: எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும். வந்துவிட்டது. நாம் தொடர விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. எனது குழுவுடன் மீண்டும் வருவேன். அதுவரை காத்திருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.