பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. பெண்களின் ஆளுமையை பறைசாற்றும் வகையில் புதிய கதைக்களத்துடன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா ஆகியோருடன் வெள்ளித்திரை நடிகரான மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கான வசனத்தை முன்னாள் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். மக்கள் மத்தியில் அனைத்து வகையிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் தற்போது 100-வது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், வசனகர்த்தா ஸ்ரீ வித்யா ஆகியோருடன் நான்கு முன்னணி நடிகைகள் மற்றும் குழுவினர் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.