‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ஜீ தமிழ் சேனலில் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது. இது ஒரு வகையில் சின்னத்திரை நடிகைகளின் அழகிப்போட்டி என்று கருதும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் நடிகர் நகுல் செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் நடிகை பார்வதி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தேஜஸ்வனி சில புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆயிஷா மூன்றாம் இடம் பிடித்தார்.
பார்வதி தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை தனது பெற்றோருடன் பெற்றுக் கொண்டார். தனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை தனது தாயாருக்கு அணிவித்து மகிழ்ந்தார். ஏராளமான பரிசு பொருட்களும் அவருக்கு வழங்கப்பட்டது. பார்வதி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மருமகளாக நடித்து வருகிறார். அதோடு தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.