விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
விஜய் டிவியில் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கோபிநாத் மீடியாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி சமூகத்திற்கான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் துப்புரவு தொழிலாளர்களில் கஷ்டங்களையும் அதையும் மீறிய அவர்களது மகத்தான சேவை குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் ஒரு செயலை செய்துள்ளார்.
கோபிநாத் துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஒருவரை சந்தித்து அவரின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொண்டு ஒருநாள் அவர்கள் செய்யும் வேலையை அவர்களுடன் சேர்ந்து செய்தும், அவர்கள் உபயோகப்படுத்தும் வாகனத்தை பயன்படுத்தியும் ஒரு துப்புரவு தொழிலாளியாகவே மாறியுள்ளார். அதன் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள அவர், “ஒரு நாள் வேலையே இவ்வளவு களைப்பாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு துப்புரவு தொழிலாளர்களும் ஒவ்வொரு நாளும் நமக்காக நமது சுற்றுப்புறத்தை தூய்மை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுங்கள்” என்று கூறியுள்ளார். கோபிநாத்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பலரும் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.