'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்லதொரு புகழை அடைந்திருக்கும் தொடர் பாக்கியலெட்சுமி. எதிர்பாராத திருப்பங்களுடன் கோபியின் ரகசியம், கோர்ட், விவாகரத்து, இரண்டாவது திருமணம் என தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தொடரின் நாயகியான சுசித்ரா, பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்திலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சுசித்ரா, 'நான் சீரியலிலிருந்து விலகவில்லை. இப்போது கூட சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் புரமோஷனுக்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. நான் விலகுவதாக வெளிவந்த தகவல் பொய்யானது' என கூறியுள்ளார்.
பாக்கியலெட்சுமி தொடரின் டிஆர்பிக்கு நாயகியாக நடிக்கும் சுசித்ராவும் முக்கிய காரணம். அவரது நடிப்பை பார்த்து பல இல்லத்தரசிகள் அவரை தங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைத்து வருகின்றனர். இதற்காக ஒருமுறை விஜய் டிவியில் சிறப்பு விழா நடத்தப்பட்டு அதில் சுசித்ரா கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.