ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் |
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி 'சூப்பர் டாடி'. ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. ரன்னர் பட்டத்தை வினோத் மற்றும் மகள் திரிஷிகா வென்றனர். அவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை 'என்னம்மா' ராமரும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் , நான்காவது இடத்தை மதுரை முத்து மற்றும் மகள் யாழினி, ஐந்தாவது இடத்தை கொட்டாச்சி மற்றும் மகள் மானஸ்வி ஆகியோர் பிடித்துள்ளனர். பல நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நுழைந்து சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தை வென்ற நடிகர் கிங் காங்கிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.