ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர்.
இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஷில்பா நடிக்கிறார். அவர் நடித்த காட்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரிக்கான ஓப்பனிங் சீனிலேயே, அவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்று விடுகிறார். படையப்பா நீலாம்பரி போல கெத்தாக நுழையும் இந்த கதாபாத்திரம் சீரியலிலுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.