இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரபல மாடலான கண்மணி மனோகரன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையானார். அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வந்த கண்மணி சமீபத்தில் தொடரை விட்டு விலகினார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் அவர், 'பாரதி கண்ணம்மாவின் அஞ்சலி கேரக்டரை ரொம்பவே மிஸ் பன்றேன். அந்த கேரக்டர் தான் நடிகையாக எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. அஞ்சலி கேரக்டருக்காக நிறைய இழந்திருக்கேன். நான் எப்போதுமே ஒரு நேரத்தில ஒரு ப்ராஜெக்ட் எடுத்து என்னோட 100 சதவீத உழைப்பை கொடுப்பேன். அதனால, பல வாய்ப்புகள் கிடைச்சும் அத பயன்படுத்திக்க முடியாம போச்சு. அஞ்சலியா மூனு வருஷம் கடந்தாச்சு. இனி அடுத்த கட்டத்துக்கு போக முடிவு பண்ணேன். அதுக்காக தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறினேன்' என்று கூறியுள்ளார்.
இரண்டாம் கதாநாயகியான அஞ்சலி கதாபாத்திரம் ஆரம்பத்தில் கண்ணம்மா எதிரான வில்லி கதாபாத்திரமாக கலக்கி வந்தது. வெண்பா என்ற புதிய வில்லி வந்தவுடன் அஞ்சலி கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்தது. இந்நிலையில் தான் கண்மணி மனோகரன் சீரியலை விட்டு வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழ் டிவியின் புது சீரியலில் கதநாயகியாக நடித்து வருகிறார்.