எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வானத்தைப் போல என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் ஹீரோ தமன் குமாரும் மற்றும் ஹீரோயின் ஸ்வேதா ஹெல்கேவும் சீரியலை விட்டு சமீபத்தில் விலகினர். அவர்களுக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நன்றாக வரவேற்பை பெற்ற இந்த தொடர் தற்போது ஓவர் டிராமாவாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வந்த மற்றொரு நடிகரான சங்கரேஷ் குமாரும் விலகி விட்டார். ஹீரோவின் அத்தை பெண்ணான பொன்னியின் காதலனாக 'சரவணன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பொன்னியின் அம்மா, அவரது மகளை நாயகனாக சின்னராசுவுக்கு திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பதால் பின்னாட்களில், இந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், சீரியல் தொடங்கிய நாளிலிருந்து எப்போதாவது மட்டுமே சரவணன் கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. எனவே, சங்கரேஷ் குமார் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை நேயர்களே கவனித்திருக்க மாட்டார்கள்.
தற்போது சங்கரேஷ் குமார் விலகியதையடுத்து இந்த சரவணன் கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் சந்தோஷ் என்பவர் நடிக்கிறார். இவர் 'பூவே பூச்சூடவா', 'அரண்மனைக் கிளி', 'அபி டெய்லர்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது நடித்த காட்சிகள் வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சரவணன் என்றி வானத்தைப் போல தொடரின் கதைக்களத்தை வேறுமாதிரியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.