‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் |
சென்னை : தனது நேயர்களுக்குபொழுதுபோக்கின் மூலம் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவதே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நோக்கமாகும். இந்த வாரயிறுதி விடுமுறையை சிறப்பானதாக மாற்ற நாளை (ஜனவரி 30), மதியம் 3.30மணிக்கு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட கிரைம் திரைப்படம் - 'சித்திரை செவ்வானம்'உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.
சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சில்வா இத்திரைப்படத்தில் இயக்குனராக முதல்முறையாக களமிறங்கியுள்ளார். நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் நாயகியாக அறிமுகமான சித்திரை செவ்வானத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை-மகளான முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி)மற்றும் ஐஷ்வர்யா (பூஜா கண்ணன்) கதாப்பாத்திரங்களை சுற்றியே கதை நகர்கிறது.
மருத்துவராக வேண்டும் என்கிற தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே முத்துவின் ஒரே இலட்சியமாக உள்ளது. ஆனால் மகள் காணாமல் போக அவரது உலகமே தலைகீழாக மாறுகிறது. ஒரு விவசாயியான முத்துப்பாண்டி, தன் மகளின் நற்பெயரை கெடுக்க நினைத்த குற்றவாளிகளைஎதிர்த்து ஜெயித்து, காணாமல் போன தன் மகளையும் கண்டுபிடிக்கும் இத்திரைப்படம் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
உணர்வுபூர்வமான இந்த தந்தை மகளின் கதையைக் காண, வரும் ஜனவரி 30, மதியம் 3:30 மணிக்கு 'சித்திரை செவ்வானம்' திரைப்படத்தைஜீ தமிழ் தொலைக்காட்சியைக் காணத்தவறாதீர்கள்.