நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா |
கண்மணி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம்பவி. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள சாம்பவி, ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டை அவர் சாப்பிடும் போது ப்ளாஸ்டிக் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஒரு வழியாக பெரிய ஆபத்தில்லாமல் ப்ளாஸ்டிக் துண்டை வெளி எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட ஹோட்டலிலோ அல்லது மற்ற ஹோட்டலிலோ சாப்பாடு ஆர்டர் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கும் படி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.