காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று வெளியேறியுள்ளார் அக்ஷரா. மாடல் மற்றும் நடிகையான இவர், தமிழ்நாட்டு மக்களிடம் முன்னதாக பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி அக்ஷராவுக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவை சமூக வலைத்தளம் தொடங்கி ஊடகம் வரை அனைவரும் பின் தொடர்கின்றனர். அந்த வகையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை எதார்த்தமாக உடைத்துள்ளார்.
அந்த பேட்டியில், அக்ஷராவிடம், வருணுக்கு பிக்பாஸ் வீட்டில் படுக்கையறையில் முத்தம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு பதிலளித்த அக்ஷரா, 'நான் வருணுக்கு முத்தம் கொடுக்கல. பெக் தான் பண்ணேன். அதுவும் வருண் போட்டுருந்த ஷர்ட் ஹூட் மேல பெக் பண்ணேன். ஆனால், பிக்பாஸ்ல அப்படியா காமிச்சாங்க?' என கேட்டுள்ளார்.
வருண் மற்றும் அக்ஷரா பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். வெளியில் வந்த பிறகும் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற வதந்தியுடன் பிக்பாஸ் முத்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. ஆனால், அதற்கான சரியான சரியான விளக்கத்தை அக்ஷரா தற்போது கொடுத்துள்ளார்.




