பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சண்டைகோழி என்றால் அது தாமரை செல்வி தான். அன்பு என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி வெளுத்து வாங்கிவிடுவார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த சீசனில் தாமரை மட்டுமே ஆறுதலாக இருந்தார். ஆனால், இந்த வார எவிக்ஷனில் தாமரை வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணப்பெட்டி டாஸ்க்கிலேயே தாமரை வெளியேறி இருக்க வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். பாவனி கூட 'பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்' என சொல்லியிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு கடன் பிரச்னை இருப்பதாக முந்தைய எபிசோடுகளில் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தவார எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.