மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், முந்தை பிக்பாஸ் சீசன்களை ஒப்பிடும் போது, பிக்பாஸ் 5, ரசிகர்களை ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு டாஸ்க்கும் விறுவிறுப்பு இல்லாமல் சென்றது. இந்நிலையில், விஜய் டிவி முந்தைய பிக்பாஸ் சீசன்களின் பிரபலங்களை வைத்து ஸ்பெஷல் ஷோ ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் பார்ட்னருடன் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், சிநேகன் - கன்னிகா, சுஜா வருணி - சிவகுமார் , அனிதா சம்பத் - பிரபாகரன், ரம்யா என்.எஸ்.கே - சத்யா, சென்ராயன் - கயல்விழி, வேல் முருகன் - கலா, ஆர்த்தி - கணேஷ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் வேல்முருகன், 'ஒவ்வொரு மனைவிக்கும் அவங்களோட புருஷன் ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு அப்படி எல்லாம் இருக்க தெரியாது. ஆனால், என் மனைவி என்னை அப்படியே ஏத்துக்கிட்டா' என்று சொல்லி கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
எங்க வீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.