சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 15 க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக் கிளி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா, அதிலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சில காலத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது குழந்தை என்பதுடன், 12 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுக்கு அதிதி என்ற மகள் உள்ளார். ரசிகர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு தாய், சேய் நலத்தை விசாரித்து வருகிறார்கள். மேலும், பிரபலங்களும், ரசிகர்களும் நீலிமாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.




