சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 15 க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக் கிளி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா, அதிலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சில காலத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது குழந்தை என்பதுடன், 12 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுக்கு அதிதி என்ற மகள் உள்ளார். ரசிகர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு தாய், சேய் நலத்தை விசாரித்து வருகிறார்கள். மேலும், பிரபலங்களும், ரசிகர்களும் நீலிமாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.