எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 15 க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக் கிளி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா, அதிலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சில காலத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது குழந்தை என்பதுடன், 12 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுக்கு அதிதி என்ற மகள் உள்ளார். ரசிகர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு தாய், சேய் நலத்தை விசாரித்து வருகிறார்கள். மேலும், பிரபலங்களும், ரசிகர்களும் நீலிமாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.