என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று 'நீதானே எந்தன் பொன் வசந்தம்'. ஜெய் ஆகாஷ், தர்ஷனா அசோகன், சோனியா, சத்ய ப்ரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்ந்து கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலங்களில் சறுக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த தொடர் 509-வது எபிசோடுடன் முடிவுக்கு வந்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டம் இருப்பது போலவும், 7 வில்லிகள் 7 தீய சக்திகள், அம்மன், அமானுஷ்யம் என கான்செப்டுகளை வைத்து திரைக்கதை அமைத்து எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தனர். இப்போது எல்லாம் சரியாகி எபிசோடில் சுபம் என போட்டு இந்த தொடரை முடித்து வைத்துள்ளனர்.