மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

உலக அளவில் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் தமிழில் முன்னணி சேனல் ஒன்று பிரம்மாண்டமாக தயாரித்து வழங்கியது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கினர். 30 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தேவகி, கிருத்திகா, வின்னி மற்றும் நித்தியா ஆகியோரில் தேவகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மாஸ்டர் செப் பட்டம் வென்றார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதியோடு இந்நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த சீசன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ்டர் செப் 2 வது சீசன் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். இரண்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? என்பது குறித்து சரிவர தெரியவில்லை. செப் கௌஷிக், செப் ஆர்த்தி, செப் ஹரிஷீன் ஆகியோர் இரண்டாவது சீசனிலும் நடுவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.