தீபிகாவுக்கு ஆதரவாகப் பேசினாரா அஜய் தேவ்கன்? | அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் |
உலக அளவில் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் தமிழில் முன்னணி சேனல் ஒன்று பிரம்மாண்டமாக தயாரித்து வழங்கியது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கினர். 30 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தேவகி, கிருத்திகா, வின்னி மற்றும் நித்தியா ஆகியோரில் தேவகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மாஸ்டர் செப் பட்டம் வென்றார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதியோடு இந்நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த சீசன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ்டர் செப் 2 வது சீசன் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். இரண்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? என்பது குறித்து சரிவர தெரியவில்லை. செப் கௌஷிக், செப் ஆர்த்தி, செப் ஹரிஷீன் ஆகியோர் இரண்டாவது சீசனிலும் நடுவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.