தங்கலான் - ஒரு மாதத்திற்குப் பிறகு வரும் விக்ரம் | தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை |
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்து திரைக்கு வந்துள்ள லவ்ஸ்டோரி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பும், அதிகம் மேக்கப் போடாத அவரது இயற்கையான அழகு குறித்தும் சோசியல் மீடியாவில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் தனது அழகை பராமரிப்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அதில், ‛நான் எனது கூந்தல் மற்றும் தோலை பராமரிப்பதற்கு செயற்கையான ரசாயனம் கலந்த ஷாம்பு, சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துவதே இல்லை. இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களையே கூந்தல் மற்றும் உடம்புக்கு பயன்படுத்திக்கொண்டு வருகிறேன். சினிமாவிற்காககூட நான் கூந்தலில் ஹேர் கலரிங் செய்து கொள்வதில்லை. இயற்கையான கூந்தலுடன்தான் நடித்து வருகிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, எனது அழகை பராமரிக்க ஆரோக்யமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். அதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் உடம்பின் உள்புறம், வெளிப்புறம் இரண்டுமே ஆரோக்யமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.