விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
இந்தியா முழுக்க நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியில் நடக்கும் 9 நாள் திருவிழா பதுக்கம்மா. இந்த நாட்களில் தெலுங்கனா பெண்கள், வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து இறைவனை வழிபடுவார்கள். வண்ண வண்ண உடைகள், ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். வண்ண மலர் கோலமாக இந்த விழா இருப்பதால் இதனை தெலுங்கான வண்ணவிழா என்றும் அழைப்பாளர்கள்.
பூக்களை கொண்டு கொண்டாடப்படுவதால் தெலுங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களை கொண்டு, இத்திருவிழா வண்ணக்கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலுங்கனாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும்.
இந்த விழாவை பற்றிய தனிப் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானும், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இணைந்து உருவாக்குகிறார்கள். மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி உள்ளார். தெலுங்கானா ஜகுர்தி என்ற அமைப்பின் சார்பில் எம்எல்சி.கே.கவிதா இதனை தயாரித்துள்ளார்.
இப்பாடல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.