சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

காதலித்து திருமணம் செய்து, நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளனர். இதுப்பற்றி நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா டுவிட்டரில், ‛‛கனத்த இதயத்துடன் இதை பகிர்கிறேன். சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிரிவு துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடக்கும் விஷயங்கள் அவர்களின் தனிப்பட்டவை. அதில் தலையிட முடியாது. ஆனாலும் இருவரும் என்னுடைய பிரியத்திற்குரியவர்கள். சமந்தாவை எப்போதும் எங்கள் குடும்பம் ஆதரிக்கும். அவர் எங்கள் குடும்பத்தில் இருந்த ஒவ்வொரு தருணங்களும் மறக்க முடியாதது. இந்த நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க கடவுளை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.




