ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலும், மிஷ்கினும் இணைந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறி வருகிறார் விஷால்.
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.