சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலும், மிஷ்கினும் இணைந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறி வருகிறார் விஷால்.
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.