அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலும், மிஷ்கினும் இணைந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறி வருகிறார் விஷால்.
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.