நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றி பெற்ற சுந்தர்.சி தற்போது அதன் மூன்றாம் பாகத்தை ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகிபாபு ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதோடு ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14-ந் தேதி அன்று அரண்மனை-3 திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சுந்தர்.சி படங்களில் பெண்களே பேயாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவும் பேயாக நடித்துள்ளார். இதனால் இந்த டிரைலர் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஷி கண்ணா கவர்ச்சிகரமாக தோன்றுகிறார்கள். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.




