'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றி பெற்ற சுந்தர்.சி தற்போது அதன் மூன்றாம் பாகத்தை ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகிபாபு ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதோடு ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14-ந் தேதி அன்று அரண்மனை-3 திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சுந்தர்.சி படங்களில் பெண்களே பேயாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவும் பேயாக நடித்துள்ளார். இதனால் இந்த டிரைலர் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஷி கண்ணா கவர்ச்சிகரமாக தோன்றுகிறார்கள். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.