இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் டைரக்சனில் ஆக்சன் படம் ஒன்றில் நடித்து வருகிறார் பிரபுதேவா. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. ஏற்கனவே பொன்மாணிக்கவேல் என்கிற படத்திலும் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்தப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அவரது போலீஸ் வேடத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பது தெரியாத நிலையில் இன்னொரு படத்திலும் பிரபுதேவா போலீசாக நடித்தால் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கு எழுந்துள்ளது.
ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இதுபற்றி கூறும்போது, “பொன்மாணிக்கவேல் படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ளார் என்றாலும் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.. ஆனால் என்னுடைய படம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறது. அதனால் இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது” என கூறியுள்ளார். அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது காக்க காக்க சூர்யாவுக்கும் சிங்கம் சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.