ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் டைரக்சனில் ஆக்சன் படம் ஒன்றில் நடித்து வருகிறார் பிரபுதேவா. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. ஏற்கனவே பொன்மாணிக்கவேல் என்கிற படத்திலும் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்தப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அவரது போலீஸ் வேடத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பது தெரியாத நிலையில் இன்னொரு படத்திலும் பிரபுதேவா போலீசாக நடித்தால் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கு எழுந்துள்ளது.
ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இதுபற்றி கூறும்போது, “பொன்மாணிக்கவேல் படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ளார் என்றாலும் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.. ஆனால் என்னுடைய படம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருகிறது. அதனால் இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது” என கூறியுள்ளார். அவர் கூறுவதை வைத்து பார்க்கும்போது காக்க காக்க சூர்யாவுக்கும் சிங்கம் சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.