திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அடிக்கடி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனாலும் அரசியலுக்கு வருவதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்.
ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70 வயதை தாண்டி விட்டதால் மகன் உடனே அரசியலுக்கு வந்து ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்கிற அவசரம். இதுதான் பிரச்சினைக்கு மூல காரணம். விஜய்யிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முயற்சித்தது உள்பட பல விஷயங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது பெயரை, படத்தை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுகுழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது விஜய் ரசிகர் மன்றம் மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.