தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் பல வருடங்களாக ஒன்றுக்கொன்று இணைந்தே செயல்பட்டு வருகிறது. இரண்டு மொழிப் படங்களுக்கும் பெரிய வித்தியாசங்களைப் பார்க்க முடியாது.
தமிழ் இயக்குனர்கள் தெலுங்கிலும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் சேகர் கம்முலா, வம்சி பைடிப்பள்ளி இருவரும் அடுத்து தமிழ் நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார்கள்.
சேகர் இயக்கத்தில் தனுஷ், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார்கள். சேகர் - தனுஷ் கூட்டணி பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. வம்சி - விஜய் கூட்டணி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பான்-இந்தியா படங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கு ஹீரோக்கள்தான் சமீப காலமாக பான்-இந்தியா படங்களாக நடித்து வருகிறார்கள். அதை தற்போது தனுஷ், விஜய் இருவரும் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து யார் தெலுங்கு இயக்குனருடன் இணையப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானால் அதற்கு ஓடிடி உரிமையாக கணிசமான தொகை கிடைத்து விடுகிறது. அதனால்தான் பலரும் பான்-இந்தியா படங்கள் பக்கம் திரும்புகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.