இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தென்னிந்திய திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு 2012-14ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்று தனியாக திரைப்பட நடன இயக்குனர்கள் சங்கம் அமைத்தவர்கள் டான்ஸ் மாஸ்டர் ரகுராம் தலைமையில் தனி அணியாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் நீதி மன்றம் சென்று அனுமதி வாங்கி வந்தனர்.
தேர்தலில் தற்போது தலைவராக உள்ள எம்.என்.மாரி தலைமையில் நடன கலைஞர்கள் சங்கத்தினரும், ரகுராம் மாஸ்டர் தலைமையில் நடன இயக்குனர்களும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 21 பதவிகளுக்கு 62 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே தலைவராக உள்ள எம்.என்.மாரி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக சுந்தரபிரேம் குமாரும், பொருளாளராக ஆர்.தேவேந்திரனும் தேர்ந்தெடுக்கபட்டனர். இவர்கள் ஏற்கெனவே அந்தப் பதவியை வகிப்பவர்கள். ரகுராம் மாஸ்டர் தலைமையிலான அணி படுதோல்வி அடைந்தது.
இதுகுறித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரி கூறும்போது "தேர்தல் அமைதியாக நடந்ததுதான் முதல் வெற்றி. மூத்த உறுப்பினரான ரகுராம் மாஸ்டர் முன்னிலையில் பெப்சி தலைவர் அமீர் தலைமையில் நாங்கள் பதவியேற்போம்" என்றார்.
ரகுராம் மாஸ்டர் கூறும்போது "மைனாரிட்டியாக உள்ள நாங்கள் தோற்பது ஆச்சர்யமில்லை. இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு எங்கள் உரிமையை நிலைநாட்டிய வகையில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்" என்றார்.