ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் காதல் ஜோடியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று(செப்., 27) காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பெருமாளை தரிசித்து விட்டு கோயிலில் இருந்து வெளியில் வந்தது முதல் அவர்களது காரில் ஏறும் வரை வீடியோகிராபர்களும், போட்டோகிராபர்களும் விடாமல் 'க்ளிக்'கிக் கொண்டே இருந்தனர். இருவரும் பொறுமையாக அனைவருக்கும் 'போஸ்' கொடுத்தனர்.
நடுவில் கொஞ்சம் வயதான ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்க, அந்த ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நயன்தாரா. நயனும், சிவனும் கைகோர்த்தபடியே தான் நடந்து வந்தனர். அவர்களுக்கு பாதுகாவலர்களாக சிலரும் கூடவே நடந்து வந்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வேண்டுதலுக்காக அவர் திருப்பதி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
சமந்தா சமீபத்தில் திருப்பதி சென்ற போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டு, அவரை சமந்தா திட்டிய வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில் இன்று நயன்தாராவிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் எந்த கேள்வியும், கேட்கவில்லை.