Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலுவுக்கும், எனக்குமான நட்பு... - நெகிழ்ந்த இளையராஜா

25 செப், 2021 - 18:19 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-says-his-friendship-with-SPB

மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியமின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று(செப்., 25) நடந்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

இளையராஜா பேசும்போது, ‛‛எனக்கும், பாலுவுக்கும் இடையேயான நட்பு பற்றி அனைவரும் அறிவர். சர்வசாதரணமாக பழக்கூடிய உண்ணதமான மனிதர். எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை. தொழில் விஷயத்தில் என்ன இப்படி பாடுற என நான் பேசி இருக்கிறேன், அவரும் சரியாக வரவில்லை என்று பேசியிருப்பார். தொழில் வேற. ஆனால் நட்பு வேற. எங்கள் நட்புக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

பாலு மருத்துவமனையில் ஆபத்தாக இருந்தபோது நான் ஒரு வீடியோவில் பாலு சீக்கிரம் எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என பேசியிருந்தேன். இந்த வீடியோவை எஸ்பிபி நினைவு திரும்பிய சமயத்தில் அவரிடம் காண்பித்துள்ளார் அவரது மகன் சரண். இதை பார்த்ததும் கண்கலங்கி, என் வீடியோவிற்கு முத்தமிட்டுள்ளார். யாரையாவது பார்க்கணுமா என அவரிடம் கேட்டபோது ராஜா வந்தா வர சொல்லுனு எஸ்பிபி சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா, அவருடைய மனசுல எனக்கு எந்த இடம் கொடுத்துள்ளார் என்று. அந்த மாதிரியான நட்பு எனக்கும், அவருக்கும்.

நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் அவரும் இருக்கிறார், நானும் இருக்கிறேன் என்பது தான் உண்மை. இது என்றும் மாறாது. அவர் மறைந்து ஓராண்டு என்பது ஒரு நிமிடம் போல் நடந்துவிட்டது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நடக்க வேண்டிய நேரத்தில் நடப்பவைகள் நடந்து கொண்டே இருக்கும்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
டாக்டர் டிரைலர் - மீண்டும் ஒரு மனிதக் கடத்தல் கதைடாக்டர் டிரைலர் - மீண்டும் ஒரு மனிதக் ... மீண்டும் தமிழில் அமலா ரீ-என்ட்ரி மீண்டும் தமிழில் அமலா ரீ-என்ட்ரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Anvar - Singapore,இந்தியா
28 செப், 2021 - 07:08 Report Abuse
Anvar எட்வின் கருத்துக்கள் சரியே .. இருக்கும்போது அதுவும் 60 வயதுக்கு மேல் .. இயல்பாகவே நெருங்கிய நட்பு தான் இருக்கும் ஆனால் 40 வருட நண்பர்கள் ஒன்றாக கூடி பேசி சரி செய்யவேண்டியதய் .. பணத்துக்கு ஆசைப்பட்டு சைங்கப்பட்டு புண்படுத்தவிட்டு .... இப்போ நீலி கண்ணீர் ... அடுத்தவன் இவரோட பாட்டை போட்டால் ஆண்மை இல்லாதவர்கள் அதையே அவர் இவரோ இவர் மகனோ செய்தால் ......
Rate this:
Santhiran - Kuala Lumpur,மலேஷியா
27 செப், 2021 - 07:06 Report Abuse
Santhiran Edwin Ur comments really hurts others. Bala n Raja 45 years fris U n Raja how many years fri? Why u so arrogantly comments?Pls respect
Rate this:
27 செப், 2021 - 10:47Report Abuse
T . Edwin Jebaraj, Tenkasiதயாரிப்பாளரிடம் பணம் வாங்கி இசை அமைத்துவிட்டு அந்த பாட்டை பாடியதற்க்காக SPB அமெரிக்காவில் இருக்கும் போது வழக்கு தொடுத்தவர் தான் உங்கள் அபிமானி.இந்த பாட்டிற்க்கு copy rights என்னிடம் தான் உள்ளது இதை பாட வேண்டுமானால் இதற்கு பணம் வேண்டும் என்று பேராசை கொண்டு அலைந்தவன் தான் இந்த இளையராஜா. இந்த மன உளைச்சலினால் தான் SPB இந்த உலகை விட்டு இவ்வளவு சீக்கிரம் மறைந்தார். வரலாறு தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே....
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
27 செப், 2021 - 21:40Report Abuse
Jayஉனக்கு என்ன வரலாறு தெரியும் இளையராஜா அவர்களை அவன் இவன் என்று சொல்ல. மரியாதையாக பேசு. இந்த உரிமம் என்பது அனைவரும் வைத்திருப்பதே. ஏன் ரஹ்மான் வாங்கவில்லையா, நேற்று முளைத்த காப்பி அடிக்கும் மேதைகள் வாங்கவில்லையா? தொழிலில் அதுவும் பணத்தால் பிரச்சனையை வர தான் செய்யும். இதே பாலு அவர்கள் ரகுமானுக்கு கொடுத்த மாதிரி இளையராஜாவிற்கு உரிமத்திற்கு பணம் கொடுக்க வேண்டியது தானே. நீ என்ன உலக மகா வள்ளலா, பணத்திற்காக தானே மதம் மாறிய கும்பல் நீ. பாலு மட்டும் நண்பன் என்ற போர்வையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம், இளையராஜா கேட்டால் தப்பா? உன்னோட பொது அறிவு பொங்கி வழியுது. நீ வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும். உன் மத ஆளுங்க மாதிரி உலராத. புரியுதா?...
Rate this:
26 செப், 2021 - 17:33 Report Abuse
T. Edwin Jebaraj, Tenkasi இருக்கும் போது பாடாய் படுத்தி விட்டு செத்த பின் நடிக்கிறானே இவன். திமிர் பிடித்தவன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in