ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
‛கர்ணன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.
உதயநிதி கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு அவர் குட்பை செல்ல திட்டமிட்டுள்ளார். மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.ரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாகவும் முதலில் உதயநிதி படம் தொடங்கும் என்றும் செய்தி வெளியானது.
இந்நிலையில் துருவ் விக்ரம், தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் கபடி பயிற்சியாளர் ஒருவரிடம் தினமும் கபடி குறித்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். இந்த பயிற்சி முடிந்தவுடன் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சியின்போது துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.