ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

ஈரான் நாட்டைச் சேர்ந்த மரால் யசார்லூ பைக்கில் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். அவர் உலகில் 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பார்த்துள்ளார். திருமணம் ஆன பிறகும் கூட அவர் தனியாக பயணம் செய்துள்ளார். அதற்கும் மேல் கர்ப்பமாக இருந்த போது கூட மரால் உலகத்தை சுற்றி வந்துள்ளார். இதுவரை 11000 கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்துள்ளாராம்.
சில தினங்களுக்கு அஜித் மற்றும் மராலை சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.தற்போது மரால் அஜித்தைச் சந்தித்தது குறித்து நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
"என்னை பி.எம்.டபிள்யு கம்பெனி தொடர்பு கொண்டு சக பைக் ரைடர் ஒருவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் அஜித்குமாரை சந்தித்து உலகபயணம் பற்றிய எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொண்டோம், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம். இருவரும் சந்திக்க ஏற்ற நேரத்தை நிர்ணயித்தோம். அவர் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் அறிந்துகொள்கிறேன்.அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது!
நான் பொதுவாக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருப்பதாக நம்புவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் நான் அவர்கள் குறித்து தீர்மானிப்பதில்லை. நம்மை ஒரு மனிதனாக வேறுபடுத்துவது என்ன என்பதையே பார்ப்பேன். தல ரசிகர்களுக்காக, உங்கள் பேவரைட் நடிகரின் உடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது, அவர் அடக்கமானவர், கனிவானவர், மரியாதைக்குரியவர், மிருதுவானவர், மென்மையான மனிதர் மற்றும் சிறந்த மனிதர் மற்றும் அவரை அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் ஒரு நடிகர் என்பதால் அல்ல, அவர் ஒரு சிறந்த நபர் மற்றும் கனிவானவர். அவர் சமூக ஊடகங்களில் இல்லை, இது அவருடைய தனியுரிமையை நாம் மதிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவரது அனுமதியுடன் புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன." என்று தெரிவித்துள்ளார்.