தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கொரோனா முதல் அலை பரவிய போது மற்ற முன்னணி ஹீரோ நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலவிதமான உதவிகளைச் செய்தார். அவரைப் பற்றி தினமும் மீடியாக்களில் ஏதாவது ஒரு செய்தி வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்தது.
இரண்டாவது அலை வந்த போதும் அவரது உதவி தொடர்ந்தது. ஆந்திராவில் சில ஊர்களில் ஆக்சிஜன் பிளான்ட்டுகளைக் கூட அவர் அமைத்துத் தந்தார். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் சுமார் 20 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல போலியான சான்றுகள் மூலம் கணக்கில் வராத பணம் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடையிலும் வெளிநாட்டு ஒழுங்குமுறை பங்களிப்பு சட்டத்தின்படியும் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நடத்தப்பட்ட சோதனையில் 1.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். 11 லாக்கர்களையும் முடக்கியுள்ளார்களாம். மும்பை, லக்னோ ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாலிவுட்டில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சோனு சூட் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.