ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா வந்தாலும் வந்தது, அது பலருடைய வாழ்க்கையில் பெரும் புயலை வீசிவிட்டுச் சென்றது. ஆனால், சினிமாவைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய புதிய பாதை ஒன்றை திறந்துவிட்டுச் சென்றுவிட்டது.
ஓடிடியில் புதிய படங்கள் நேரடி வெளியீடு என்பது தான் அந்த புதிய பாதை. ஓடிடியில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சில பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியானது, தியேட்டர்காரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும்.
இப்போது வாராவாரம் ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகி தியேட்டர்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் வெளியான 'தலைவி, லாபம்' ஆகிய படங்கள் வசூலைத் தரவில்லை. பல ஊர்களில் அப்படங்கள் இன்றே கடைசி என்கிறார்கள். அடுத்து நாளை 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இப்படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது நாளைதான் தெரிய வரும்.
இதனிடையே, ஓடிடி தளங்களில் வாராவாரம் படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'டிக்கிலோனா' ஓடிடியிலும், 'துக்ளக் தர்பார்' முதலில் டிவி, மறுநாள் ஓடிடியிலும் வெளியாகியது. நாளை 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் செப்டம்பர் 24ம் தேதி 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' ஓடிடியில் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓடிடியில் படங்கள் வருவது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.