'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? |

தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர், என்னை அறிந்தால், 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆலம்பனா' படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சமூக நலனில் அக்கறைக் கொண்ட இவர், சமூகவலைதளங்களில் எப்போதும் தீவிரமாக இருப்பார். இந்நிலையில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட் மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம் இவரை பேச்சாளராக அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் நடிகை பார்வதி நாயரின் பேச்சு அனைவரின் புருவத்தையும் வியப்பில் உயர்த்தியது. விழாவின் இறுதியில் அவருக்கு 'டோஸ்ட் மாஸ்டர்' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.