திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனிடையே தான் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை என கூறியுள்ள வடிவேலு, ‛என் பெயரில் உலா வரும் சமூகவலைதள கணக்குகள் அனைத்தும் போலி' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் சுராஜ் இயக்கும் படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் டுவிட்டர் பக்கத்தில் வடிவேலு உடன் தான் உள்ள ரசிகர்கள் உருவாக்கிய படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர், வடிவேலு உடன் நடிப்பதை கிட்டதட்ட உறுதிப்படுத்தியுள்ளார். அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள ப்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தரலாம்.