'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனிடையே தான் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை என கூறியுள்ள வடிவேலு, ‛என் பெயரில் உலா வரும் சமூகவலைதள கணக்குகள் அனைத்தும் போலி' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் சுராஜ் இயக்கும் படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் டுவிட்டர் பக்கத்தில் வடிவேலு உடன் தான் உள்ள ரசிகர்கள் உருவாக்கிய படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர், வடிவேலு உடன் நடிப்பதை கிட்டதட்ட உறுதிப்படுத்தியுள்ளார். அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள ப்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தரலாம்.