நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
அதையடுத்து வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளத்து. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும் வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லையாம். எனவே மீண்டும் நாய் சேகர், வடிவேலுவின் நாய் சேகர் போன்ற தலைப்புகளை வடிவேலு படக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.