பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. அந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் எப்படி தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சங்கத்திற்குப் போட்டியிடலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதன்பின் அது அப்படியே அடங்கிப் போனது.
இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ். அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்காக 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக அறிவித்துள்ளாராம். அவ்வளவு பெரிய தொகையை பிரகாஷ்ராஜ் அறிவித்தது குறித்துதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னணி ஹீரோக்கள் பலரும் பிரகாஷ்ராஜுக்கு அவர்களது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்களாம்.