புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார்.
அப்போது, அவர் காரை கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இந்த படங்களும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த 3 ஊழியர்களை, கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.