மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
பாக்கியலெட்சுமி சீரியல் வெற்றிகரமாக 300-வது எபிசோடை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலெட்சுமி சீரியல் உள்ளது. தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த புரோமோவில் நாம் காண்பது பாக்கியலெட்சுமி சீரியலை பார்த்து இன்ஸ்பையர் ஆன கூட்டுக்குடும்பத்தின் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசும் ஒரு வயதான தயார் பாக்கியலெட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தை பார்த்து இண்ஸ்பையர் ஆகி தான், அவர் ஆட்டோ ஒட்டுவதாகவும், உணவு சேவை வழங்கி வருவதாகவும் கூறினார். இந்த நெகிழ்ச்சியான பேச்சுடன் ஆரம்பமாகும் புரோமோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாக்கியலெட்சுமி 300 சிறப்பு நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.