அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கன்னடத்தில் தயாராகி வரும் படம் விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அசோக், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார், ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பேண்டஸி த்ரில்லர் வகை படமாகும். பல வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் உருவாகும் 3டி தொழில்நுட்ப படம். கன்னடம் தவிர்த்து 14 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் 3டி பணிகளுக்கென்றே பல கோடி செலவு செய்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். என்றார்.