மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மெர்சல் படத்திற்கு பிறகு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடித்தார் வடிவேலு. ஆனால் சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதையடுத்து அந்த படத்திற்கு தனக்கு பல கோடி நஷ்டமாகிவிட்டது. அதை வடிவேலு தான் ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இந்த விவகாரத்தில் வடிவேலு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இந்த பிரச்னை தீர்ந்தது. இதனால் மீண்டும் புதிய படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் வெளி உலகில் அதிகமாக காணப்படுகிறார். சில பிரபலங்கள் வடிவேலுவை சந்தித்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனும் வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடத்தில், எனது பெயரை ஒரேயொரு முறை உங்க ஸ்டைலில் சொல்லுங்க என்று அவர் கேட்க, அகல்யா வெங்கடேசன் என்ற அந்த பெயரை தனது பாணிலேயே கிண்டலாக அவரை கலாய்த்தபடி சொல்கிறார் வடிவேலு. இந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் அகல்யா. இதற்கு இந்த மனுஷன இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.