வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தற்போது ஒரே சமயத்தில் நான்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த டிவி நிறுவனம். அதில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தை எட்டியுள்ளன.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்பதும் கிட்டத்தட்ட ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தநிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி அன்றும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 11ம் தேதியன்றும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு படங்களுமே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.